இன்று (august 26) அன்னை தெரேசாவின் நூறாவது பிறந்தநாள்.அவரின் நினைவாக சில பகிர்தல்கள். அவர் சொன்ன கூற்றுகளாய் தி வீக் புத்தகத்தில் படித்தது.
யர்ருக்கும் வேண்டாதவராய், அன்பற்று, எல்லோராலும் மறக்கப்பட்டு, - நான் நினைக்கிறேன் அது தான் பசி, அதுதான் பெரிய வறுமை.
தலைவர்களுக்கு காத்தீராதீர்கள். நீங்களே செய்யுங்கள் - ஒருவருக்கு ஒருவர்.
நாம் ஒருவருக்கு ஒருவர் புன்னகையோடு சந்தித்து கொள்வோம். புன்னகையே அன்பின் ஆரம்பம்!
ஒருவருக்கு ஒருவர் புன்னகைதுக் கொள்ளுங்கள் - உங்கள் மனைவியை பார்த்தும், கணவரைப் பார்த்தும், குழந்தைகளைப் பார்த்தும் புனகையுங்கள் - யாராய் இருந்தாலும் புன்னகையுங்கள் - அது உங்களை மேலும் அன்பினில் வளரச் செய்யும்.