Thursday, August 26, 2010

இன்று (august 26) அன்னை தெரேசாவின் நூறாவது பிறந்தநாள்.அவரின் நினைவாக சில பகிர்தல்கள். அவர் சொன்ன கூற்றுகளாய் தி வீக் புத்தகத்தில் படித்தது.

யர்ருக்கும் வேண்டாதவராய், அன்பற்று, எல்லோராலும் மறக்கப்பட்டு, - நான் நினைக்கிறேன் அது தான் பசி, அதுதான் பெரிய வறுமை.

தலைவர்களுக்கு காத்தீராதீர்கள். நீங்களே செய்யுங்கள் - ஒருவருக்கு ஒருவர்.

நாம் ஒருவருக்கு ஒருவர் புன்னகையோடு சந்தித்து கொள்வோம். புன்னகையே அன்பின் ஆரம்பம்!

ஒருவருக்கு ஒருவர் புன்னகைதுக் கொள்ளுங்கள் - உங்கள் மனைவியை பார்த்தும், கணவரைப் பார்த்தும், குழந்தைகளைப் பார்த்தும் புனகையுங்கள் - யாராய் இருந்தாலும் புன்னகையுங்கள் - அது உங்களை மேலும் அன்பினில் வளரச் செய்யும்.
தத்து பித்து

 நான் இவர்களுக்கு
எட்டா (வது) அதிசயமானேன் !?


நியூ ஏஜ் பெற்றோர்களின்
தத்து பிள்ளைகளாய் 
பாம்பும் உடும்பும்


வன விலங்குகளுக்கு
வரிந்து கட்டும்
மனவிலங்குகள்!


அம்மாவோடும் அப்பாவோடும்
பிறந்தவர்களை
மறந்தவர்கள் 
பதினேழு பிள்ளை பெற்றவரைப்  
பற்றிய
இணையத் தளச் செய்தியை
மறக்க மறுக்கிறார்கள்.


இந்த அதிசயங்கள் - என்னை
அதிசயிக்கவில்லை   - என்ற
நான்
இவர்களுக்கு
எட்டா(வது) அதிசயமானேன்!